உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் அறம் நிறைந்த வாழ்வை வாழ வேண்டும் என்றால் அவர்களிடம் அன்பு நிறைந்த நெஞ்சமும், தீய செயல்களை செய்யும் போது மனதுக்குள் அச்சமும், புலால்உணவை மறுத்தலும், பிறருக்கு துன்பம் செய்யாமல் இருத்தலும், உயிர்களைக் கொல்லாமல் வாழ்தல் போன்ற குணங்கள் மக்களின் உள்ளங்களில் இருக்க வேண்டும் என அறநூல்கள் கூறுகின்றன. இவ்வாறு அறநூல்கள் கூறும் அறம் நிறைந்த வாழ்வை வாழ்ந்த அருளாளர்களான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் கொங்கு நாட்டின் கச்சியப்பர் என்று புகழப்படும் கந்தசாமி சுவாமிகளும் மக்களின் உள்ளங்களில் கொல்லாமை உணர்வை ஏற்படுத்த முருகப் பெருமான் மீது தங்கள் பாடிய மாலை நூல்களில் முருகப்பெருமானிடம் எவ்வாறெல்லாம் தங்களின் மனக்கருத்துக்களை முன்வைத்து வேண்டுகின்றன என்று ஒப்புமை நோக்கில் இவ்வாய்வு கட்டுரைச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது.
If all the people in this world are to live a life of charity, the hearts of the people should have kindness towards other men, the fear of the mind, understanding of the suffering of others, and the refusal of killing of life. Thus, the article is in line with the Kandasamy Swami’s and Dandapani Swami’s, who have been living in the minds of the people with similar virtues.